Tuesday, January 13, 2009

தமிழரை ஏறி மிதித்த சிங்கள அதிகாரி- நன்றி: தமிழ்க்கதிர்


பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு உழைத்தவர்களில் ஆனந்தா கல்லூரி அதிபர் எல்.ஏச். மெதானந்தா, பேராசிரியர் எப். ஆர். ஜெயசூரியா, ஹென்பிற்றகெதரகே ஞானசீக தேரோ, அரச நிர்வாக அதிகாரி என்.கியூ. டயஸ், கே.எம்.ராஜரத்தின ஆகியோர் முதன்மை முக்கியமானவர்கள். 1956இல் பண்டாரநாயக்க பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு இவர்கள் செய்த நாடளாவிய பிரச்சாரப் பணி அளப்பரி யது.

இந்த ஐவரில் என்.கியூ.டயஸ் எனப்படும் நீல் குயின்ரஸ் டயஸ் (Neil Quintus Dias) மிகவும் வித்தியாசமானவர். இவர் அதிதீவிர சிங்கள இனத் தேசியவாதி ஆனால் இவருக்குச் சிங்களம் சரிவரப் பேச வராது. அவருக்குக் கைவந்த மொழி ஆங்கிலம். அவர் பொதுமக்களோடு உறவாடுவதை விரும்புவ தில்லை. தனது தராதரத்திற்கு நிகரானவர் களோடு மாத்திரம் அவர் அளவோடு உறவாடு வார். உணவில் அவர் ஆங்கில முறையைக் கைக்கொண்டவர். ஆங்கிலேயர்களைப் போல் மதிய உணவுக்கு முன் சோடாவுடன் கலந்த ஜின் மதுவை உட்கொள்வார். கொழும்பின் பிரபல நட்சத்திர உணவு விடுதியில் கடலைப் பார்த்தாற் போல் அவருக்கென்று பிரத்தியேக மாக உணவு மேசையும் நாற்காலியும் போடப்பட்டிருக்கும். அவர் நல்ல பணவசதி உள்ளவர்.

இத்தனை அம்சங்களோடு கூடிய இந்த மனிதர் தமிழர்களை மனமார வெறுத்தார். தமிழர்களுக்குச் சிங்கள மேலாதிக்கத்தைப் புகட்ட வேண்டும். (Sinhala Ascendancy) என்று வெளிப்படையாக அவர் கூறுவார். அவர் யாழ்ப் பாணத் தமிழர்கள், ஒட்டுமொத்த இந்தியர்கள், றோமன் கத்தோலிக்க மதத்தினர், மேற்கு நாகரி கத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் போன்ற வர்களை அறவே வெறுத்தார். இவர்கள் மானு டப் பிறவிகள் அல்ல என்றும் அவர் ஆங்கில மொழியில் கூறுவார். இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளில் ஆரிய- சிங்கள ஆடை களை முதன்முதலாக அணிந்தவர் இவர்தான். ஆரிய சிங்கள ஆடை என்று வெள்ளை வேட்டி, கரை வைத்த சால்வை, நீளமான மேல்சட்டை என்பனவற்றை அழைப்பார்கள். தன்னுடைய போத்துக்கேயப் பெயரை மாத்திரம் மாற்ற அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் தனது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் தனது பெயரை தயசிறி என்று பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் கே.எம். பணிக்கர் என்ற மலையாளி 1944- 45 இல் இந்து மாகடலில் இந்தியா ஆதிக்கம் செய்ய வேண்டிய அவசியத்தையும், இலங்கை பர்மா உட்படக் கடலோர நாடுகள் இந்திய ஆளுமைக்குள் இருக்க வேண்டிய தேவையையும் உணர்த்தி ஒரு பாரிய நூலை வெளியிட்டார். (The Strategic Problems Of The Indian Ocean. By K.m.Panikkar 1944-45) இந்த நூலைப் படித்தபின் என்.கியூ. டயஸ் பல முக்கிய முடிவுகளை எடுத்தார். இந்தியா வின் பரந்த நோக்கங்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இந்தியாவின் பிடியில் விழாமல் இலங்கை தன்னைக் காப்பாற்ற வேண்டும். இதற்கான வழிமுறைகளை இலங்கை கால தாமதமின்றி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஈழத்தமிழர் தொடர்பாக அவர் பிற்காலத்தில் எடுத்த ஒவ்வொரு அசைவிலும் தெளிவாகத் தெரிகிறது. என். கியூ.டயசின் சில சிந்தனை ஓட்டங்களும் அவற்றிற்கு அமைவான செயற்பாடுகளும் அவரை ஒரு தீர்க்கதரிசி (Prophet) நிலைக்கு உயர்த்துவதாக அவரு டைய வாழ்க்கையை அலசியவர்கள் கூறுகி றார்கள்.

பிரிட்டிசார் காலத்தில் உருவாக்கப்பட்ட சி.சி.எஸ் (C .C .S = Ceylon Civil Service) என்ற நிர்வாக சேவை அதிகாரியாக டயஸ் தனது பொது வாழ்வை ஆரம்பித்தார். இன்று போல் அல்லாமல் சி.சி.எஸ் தர அதிகாரியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு உயர் கல்வித் தகைமை, குடும்பத்தொடர்பு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, உடல் அழகு, முகத் தழகு என்பன ஒருவருக்கு இருத்தல் அவசியம். இவருடைய நெஞ்சில் சிங்கள பௌத்த அடிப்படைவாதம் குடிகொண்டிருந்தது. பண்டாரநாயக்க 1956 இல் தனிச் சிங்களக் கோசத்தைக் கிளப்பியவுடன் பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் போல் டயஸ் பண்டாவுடன் ஒட்டிக்கொண்டார். தேர்தல் பிரச் சாரத்திலும் பின்னணி வேலைகளிலும் டயஸ் செய்த உதவிக்குப் பிரதியுபகாரமாக நிர்வாக சேவையில் அதியுயர் பதவியான திறைசேரிச் செயலாளர் பதவியைத் தர பண்டா முன்வந்தார். தனக்குக் கலாச்சார அமைச்சின் இயக்குநர் (Director Of Cul Tural Affairs) பதவியைத் தரும்படி டயஸ் வேண்டினார். டயஸ் பௌத்த- சிங்கள முன்னெடுப்பை இந்த அமைச்சு ஊடாகச் செய்யும் திட்டத்திற்கு அமைவாக இந்தப் பதவியைக் கேட்டுப் பெற்றார்.

1959 இல் பண்டாரநாயக்க ஒரு புத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டபின் 1959 தொடக்கம் யூலை 1960 வரை டபிள்யூ தக நாயக்கவும் டட்லி சேனநாயக்கவும் பிரதமர்களாக வந்தார்கள். இருவரும் ஒருவர்பின் ஒருவராகப் பதவி இழந்தபின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியைப் பிடித்தார். இவருடைய ஆட்சி 1960 தொடக்கம் 1965 வரை நீடித்தது. இந்தக் காலத்தில் என்.கியூ.டயசின் ஆதிக்கம் உச்சம் அடைந்தது. கணவர் பண்டாரநாயக்கவுடனான டயசின் உறவு வித்தியாசமானது. சிறிமாவோ மீது ஆதிக்கம் செலுத்துவதுடன் டயஸ் தமிழர்களுக்கு எதிரான தனது சொந்தக் கொள்கையை வெகு தூரம் எடுத்துச் சென்றார். சிறிமாவோ ஆட்சி தனது சொந்த விருப்பு வெறுப்பை முன்னெடுப்பதற்கு டயசுக்கு வசதியளித்தது எனலாம்.

தனிச்சிங்களச் சட்டத்தை வட கிழக்கின் நிர்வாகம் அனைத்திலும் புகுத்த வேண்டும் என்பதில் கணவரிலும் பார்க்கச் சிறிமாவோ தீவிரம் காட்டினார். இந்த மட்டில் அவருக்கும் டயசுக்கும் ஒருமித்த கருத்துநிலை காணப் பட்டது. சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டு வதற்குச் சிங்கள மொழிதான் சிறந்த கருவி என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். தமிழர்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கைகளைப் பொறுத்தளவில் சிறிமா வோவின் நிலைப்பாடு ஷஷநீங்கள் கேட்பதைத் தரமாட்டேன், நான் தருவதைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்|| டயசும் குறைந்த வரல்ல தமிழர்களின் கோரிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்கும்படி அவர் தனது அதிகாரிகளுக்குப் பணித்தார்.

சிறிமாவோ தனது ஆட்சியில் என்.கியூ. டயசை நிரந்தரப் பாதுகாப்புச் செயலராகவும் வெளிவிவகாரத்திற்குப் பொறுப்பானவராகவும் நியமித்தா (Permanent Defence Secretary Of Defence And External Affairs) சிறிமாவோ வின் அமைச்சர்கள் கூட டயசுடன் மோதுவதற்கு அச்சப்படும் அளவுக்குக் கொழும்பு விவகா ரங்களில் அவருடைய சகல வல்லமையுடைய ஆதிக்கம் செறிவாகப் பரவியிருந்தது. சிறிமாவோவின் முரட்டுப் பிடிவாதம் காரணமாக சம~;டிக் கட்சியினரின் வடகிழக்குத் தழுவிய சத்தியாகிரகப் போராட்டம் வலுப்படத் தொடங்கியது. சம~;டியினரின் எதிர்ப்பைச் சமாளித்தவாறு தனிச் சிங்களச் சட்டத்தைத் தமிழர் பகுதிகளில் புகுத்தும் பொறுப்பை டயஸ் ஏற்றுக்கொண்டார்.

1961 ஆம் ஆண்டு புதுவருடப் பிறப்போடு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருக் கோணமலை, மட்டக்களப்பு ஆகிய கச்சேரி அலுவலகங்களில் வேலை நடப்பதைத் தடுப்பதற்காகச் சத்தியாக்கிரகிகள் காந்திய முறைப்படி அலுவலக வாயில்களை முற்றுகை இட்டனர். பொலிஸ் படையின் தடியடி உட்படப் பல்வேறு வதைகளையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். 1961 மார்ச் மாதத்தில் தனது பரிவாரங்களோடு டயஸ் யாழ்ப்பாணம் வந்தார். அவரைச் சுற்றிப் பொலிசும் தமிழ் சிங்கள அதி காரிகளும் நிலையெடுத்து நின்றனர். யாழ். கச்சேரி வாயிலில் ஆண், பெண் சத்தியாக் கிரகிகள் அமைதியாக நிலத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையில் பாதை அமைத்துக் கச்சேரிக்குள் நுழைய டயஸ் எத்தனித்தார். இதைத் தடுப்பதற்காக சத்தியாக் கிரகிகள் நிலத்தில் நெடுஞ்சாணாகப் படுத்துக் கொண்டனர். அப்போதுதான் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புப் படித்த சிங்கள பௌத்த தீவிரவாதியான டயஸ் ஒரு மிலேச்சத்தனமான வேலையைச் செய்தார்.

படுத்திருந்த சத்தியாக்கிரகிகளை ஏறி மிதித்தவாறு அவர் கச்சேரிக்குள் நுழைந்தார். பொலிஸ்காரர்களையும் கூட வந்த அதி காரிகளையும் பார்த்து டயஸ் ஏன் தயங்கு கிறீர்கள், ஏறி மிதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார். இந்தச் சம்பவம் சமஷ்டிக் கட்சியில் அப்போது உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற வீ.நவரத்தினத்தின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (The Fall And Rise Of The Tamil Nation. V.Navaratnam. (Anada) தனது இறுதிக் காலத்தில் நவரத்தினம் தமிழீழத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தார். சிங்களவர்கள் மத்தியில் டயசைப் போன்றவர்கள் பெரும்பான்மையாக இருக்கி றார்கள். அமைதி வழிப் போராட்டம் தோல்வி கண்டதற்கு இதுதான் காரணம். அமைதி வழியில் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கை களை வன்முறை மூலம் சிங்கள அரசுகள் அடக்க முற்பட்டபோது ஆயுதம் தூக்க வேண் டிய கட்டாயம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டது.வடகிழக்கு நிர்வாகத்தில் தமிழுக்கு இடமளிக்காமல் சிங்களத்தைப் புகுத்துவதில் சிறிமாவோவும் அவருடைய பாதுகாப்புச் செயலர் டயசும் விடாப்பிடியாக இருந்தனர். சிங்களத்தை நிர்வாக மொழியாகப் புகுத்தும் நோக்குடன் டயசின் ஆலோசனையுடன் யாழ்ப் பாண அரச அதிபராக நெவில் ஜெயவீர, மன்னார் அரச அதிபராக எல்.ஓ.கே.ஜீபர்நாந்தோ, வவுனியா அரச அதிபராக ஆர்.எம்.பீ.சேன நாயக்க, திருக்கோணமலை அரச அதிபராக எம்.பீ.சேனநாயக்க ஆகியோர்களை சிறிமாவோ நியமித்தார். நெவில் ஜெயவீர முன்பு கல் லோயாத் திட்டத்தின் மேலதிகாரியாகப் பணி யாற்றியவர். 14,000 தொழிலாளர்களை இவர் கல்லோயாவில் கட்டி மேய்த்த காரணத்தால் யாழ்ப்பாணத்தில் சமஷ்டிக் கட்சியினரின் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் அவர் திறம்படக் கையாள்வார் என்ற நம்பிக்கை டய சுக்கும் சிறிமாவோவுக்கும் இருந்தது. தனக்கு இடப்பட்ட பணி பற்றி ஜெயவீர பெரும் கடியன் என்று பெயர் பெற்ற ஜேர்மன் றொட்வைலர் நாய்போல் சத்தியாக்கிரகிகள் மீது பாய்வேன் என்ற எதிர்பார்ப்பு இருவரிடமும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். (ஜலன்ற் ஞாயிறு இதழ் 2008.10.05)

சிறிமாவோவின் பாதுகாப்புச் செயலர் என்.கியூ.டயசைத் தீர்க்கதரிசி எனப்படுவதற்குச் சில காத்திரமான காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுடைய எதிர்ப்பு சத்தியாக் கிரகத்தோடு நிற்கமாட்டாது. அது சரியாக இரு பத்தைந்து வருடங்களில் இளைய தலை முறையினர் தலைமையில் ஆயுதப் போராட்ட மாக மாறும் என்று டயஸ் உறுதியாக நம்பினார். அப்படியானதொரு ஆயுதப்போராட்டம் தமிழர் களால் தொடங்கப்படும்போது அதை எதிர் கொள்வதற்குச் சிங்களவர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று டயஸ் உறுதி பூண்டார். தனிச் சிங்களச் சட்டத்தை வடகிழக்கில் அமுலாக்குவதோடு எதிர்காலத்தில் வரப்போகும் ஆயுதப் போராட்டத்தையும் எதிர்கொள்ள டயஸ் தயாரானார்.

வடமாகாணத்தைச் சுற்றி அவர் சிங்களத் துருப்புக்கள் அடங்கிய இராணுவ முகாம்களை அமைக்கும்படி லெப்.கேணல் சேபால அட்டிய கலவுக்கு உத்தரவு பிறப்பித்தார். மன்னார் தொடக்கம் திருக்கோணமலை வரை இந்த முகாம்கள் அமைக்கப்பட்டன. மன்னார் மாவட் டத்தில் அரிப்பு, மறிச்சிக்கட்டி, பளை, தாழ்வுபாடு ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப் பட்டன. யாழ்.மாவட்டத்தில் பூநகரி, காரைநகர், பலாலி, பருத்தித்துறை, ஆனையிறவு ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன. கிழக்கில் திருக்கோணமலை யிலும் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன. காரைநகர் கடற்படைமுகாமை விரிவு படுத்தும்படியும் அதற்காகத் தமிழ் மக்களின் நிலங்களைச் சுவீகரிக்கும் படியும் அவர் உத்தரவிட்டார். வெறும் அலங்காரத் திற்காகச் சிறிலங்கா வைத்திருந்த வெள்ளை யானை போன்ற கடற்கலங்களைக் கைவிடும் படியும் வினைத்திறனுள்ள கடற் கலங்களைக் கொள்வனவு செய்யும்படியும் அவர் பரிந்துரை செய்தார். பனிப் போர்க்காலத்தில் சோவியத் ஒன்றியத்தை முடக்குவதற்காக அமெரிக்கா கையாண்ட விரிவைத் தடுக்கும் கொன்ரேயின்மென்ற் (Containment) கொள்கைக்கு நிகரான தென்று டயசின் செயற்பாடுகள் பாராட்டப்படுகின்றன.

வடகிழக்கில் சங்கிலித்தொடர் போல் நிரந்தர சிங்கள இராணுவ முகாம்களை அமைப்பதற்குத் தமிழர்களிடமிருந்து எழும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக ஒரு சமயோசிதமான உத் தியை அவர் செயற்படுத்தினார். இதனால் உண்மை நோக்கம் அறியாத அப்பாவித் தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர். தமிழ் நாட்டில் இருந்து இலங்கை வரும் கள்ளத்தோணித் தமிழர்களின் வருகையைத் தடுப்பதற்காக என்று கூறி அவர் ராபாய் (Taffi) எனப்படும் நடவடிக்கையை ஆரம்பித்தார். தமிழ் நாட்டில் இருந்து வரும் திருட்டுக் குடியேற்றக்காரர்களைத் தடுப்பதற்காகத் தான் இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்று டயஸ் விளக்கம் அளித்தார். இதற்குச் சில தமிழ்த் தலைவர்கள் தமது முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். வல்வெட்டித்துறை, ஊர்காவற்றுறை போன்ற கரையோரங்களில் இருந்து தமிழ்; நாட்டிக்குப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் இந்த இராணுவ முகாம்களை அமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்று டயஸ் கூறியபோது அதையும் தமிழ் தலைவர்கள் உள்வாங்கிக் கொண்டனர். இராணுவ முகாம்கள் அமைத்தல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைப் பதற்காக யாழ். அதிபரின் பழைய பூங்கா விடுதியில் தன்னையும், அரச அதிபரையும், சேபால அட்டிய கலவையும் தொடுக்கும் எஸ்.எஸ்.பி. ரக இருவழித் தொடர்பு வானொலி இணைப்பையும் டயஸ் நிறுவினார்.

அன்று டயஸ் எதிர்பார்த்த இன்னுமொரு தீர்க்கதரிசனம் பற்றியும் அவருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன. அவர் அன்று கூறியது 1980 களில் அச்சொட்டாக நிறைவேறியது உண்மை யில் ஒரு வியப்பூட்டும் அம்சம்தான். தமிழ் இளைஞர்கள் என்றோ ஒரு நாள் போருக்குத் தயாராவார்கள். இதை இந்தியா தனது தேசிய நலனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும். தமிழ் இளைஞர்களுக்கு உதவ இந்தியா முன்வரும். தமிழ் நாடு முக்கிய இடம் பிடிக்கும். தமிழர்களின் ஆயுதப் போராட்டத் திற்குத் தமிழ் நாடு களமாக அமையும். அங்கிருந்து ஆயுதங் களும் பிற உதவிகளும் தமிழர் பகுதிக்கு வந்து சேரும் இத் தனையையும் டயஸ் 1960களில் எதிர்வு கூறினார். அந்தளவோடு அவர் நிற்கவில்லை. பாக்குத் தொடுவாய் ஊடாக எதிர்காலத்தில் நடக்கப்போகும் போக்குவரவைத் தடுப்பதற்குப் பொருத்தமான கடற்படையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் திட்டமிட்டார்.

என்.கியூ.டயஸ் என்ற மனிதரை ஆய்வு செய்வோர் அவரை அரச நிர்வாகி, இராணுவத் திட்டமிடல் நிபுணர், விட்டுக்கொடுப் பிற்கு இடம் வையாத சிங்களத் தேசியவாதி என்ற மூன்று வடிவங்களில் பார்க்கிறார்கள். இலங்கையின் இனப்பிரச் சினையை உருவாக்கியதோடு அதைத் தீர்க்க முடியாத தூரத்திற்குக் கொண்டு சென்றவர்கள் என்று கணவன் பண்டார நாயக்க, மனைவி சிறிமாவோ, மகள் சந்திரிகா பற்றிக் குறிப்பிடு வார்கள். டயஸ் இந்தப் பட்டியலில் இடம்பெறும் தகுதி உடைய வர். அவரைத் தீர்க்கதரிசி என்று பாராட்டுவோர் ஒரு பேருண் மையை மறந்து விட்டார்கள். இவரைப் போன்றவர்களின் தூர நோக்கற்ற நடவடிக்கைகளால் இலங்கையில் இரு நாடு பிறக் கும் என்ற தரிசனம் இவர்களுக்கு எட்டாமல் போய்விட்டது. உண்மையான தீர்க்கதரிசி தமிழீழத்தின் பிறப்பை என்றோ உணர்ந்திருப்பான். அதை எதிர்பார்த்துக் காத்திருப்பான் ஊழிற் பெருவலி யாதுள?

- அன்பரசு-

Monday, January 12, 2009

தமிழக உறவுகளுக்கு

ஒவ்வொரு தமிழக உடன் பிறப்புக்களுக்கும்...
ஈழத்தமிழனின் வேண்டுகோள் கடிதம்
எமக்காக உங்களில் பலரின் உணர்வுகள் அடிபட்டு நொந்து நூலாகி இருக்கும் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை அளிக்கலாம். நிச்சயமாக. ஆனால் இந்திய அரசியலை ஓரளவிற்கு விளங்கிக்கொண்ட எனக்கும் சிலருக்கும் அது மிகக் கசப்பான உண்மையான எதிர்வுகூறல்களை திறந்துள்ளது. இன்று எமக்காக குரல் கொடுக்கும் நீங்கள் தோல்வியுற்றால் நாளை நீங்கள் உங்களுக்காக எந்தொவொரு சூழ்நிலையிலும் குரல் கொடுத்தாலும் மிகக் கேவலமாக (தற்பொழுது எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கும் போது என்ன நிலை ஏற்பட்டதோ) உதாசீனப்படுத்தப்படலாம். இது யதார்த்தம். சிலவேளை என் வார்த்தை வடிவமைப்பு இந்து தினமலர் பத்திரிகை எழுதுவது போல இருக்கலாம். அதைவிடுத்து எமது போராட்டம் பற்றிய ஒரு சிறு வரலாற்று அறிமுகம்.

இந்த அறிமுகம் மிகமுக்கியமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக உங்களை திசைதிருப்பும் சக்திகளுக்கு ஒரு கேள்வியாகவும் உங்களுக்கு ஒரு விளக்கமாகவும் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

80களுக்கு முன் ஏன் போராட்டம் ஆரம்பித்தது. சுருக்கமாக சொல்லாப்போனால் தமிழர்கள் ஒதுக்கப்படடார்கள். இதைப்பற்றி விளக்கமாக எழுதமுடியாது.
57 கலவரம் பின் 83 கலவரம் இப்படிப் பல. ஒன்றைமட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

1. எமது போராட்ம் நியாயமானது. மற்றது அது இலகுவாக அரசியல் தீர்வை அடையமுடியாது. தமிழீழம் தான் தீர்வு.
2. அல்லது ஒன்றுபட்ட சிறிலஙகாவிற்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறையாண்மைக்குற்ட்ட தீர்மானம்.

இதில் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு மற்றது கேலிக்குரியதாக இருக்கலாம்.

இப்பொழுது இரண்டாது விடயத்திற்கு வருவோம். அதில் முக்கியமாக இந்திய மத்திய அரசும் (இதில் காங்கிரஸ் பா.ஜ.க. என்று ஒன்றும் இல்லை. அனைத்தும் 3 வீதமான பிராணர்களாலும் அவர்களை சார்ந்தவர்களாலும் தீர்மானிக்கப்படும் இந்திய வெளியுறவுக் கொள்கை.) கருணாநிதியும், ஞானியும் தெளிவாக பிண்ணுட்டங்களை இடும் பலருக்கும் தெரிந்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் இலங்கை இறையான்மைகுட்பட்ட ஒரு தீர்வு.
அது சரி 22000 போராளிகளையும்.. வேண்டாம் புலி பயங்கரவாதிகளையும் 1லட்சத்திற்குமேற்பட்ட மக்களையும் கொன்றாழித்த பின் ஒன்றுபட்ட இலங்கை உங்களுக்கு சரியாக படாலம். எமக்கல்ல. இவ்வளவு இழந்த பின் ஒன்றுபட்ட இலங்கை ஒரு கேலிக்கூத்தாகும். ஆனால் நிச்சயமாக மேலே குறிப்பிட்டவர்களுக்கு அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆனால் ஏன் என்று சற்று சிந்தித்தீகளா? சில அடிப்படையன விடயங்களை மறைத்துவி்ட்டு (மறந்து விட்டல்ல மறைத்துவிட்டு) பேசும் இந்திய வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் (இந்து, தினமலர், ஞானி, தமிழக காங்கிரஸ்) சில பிண்ணுட்டம் இடுவோர்ருக்கும் நான் தெளிவுபடுத்ததேவையில்லை. காரணம் அவர்கள் தெரிந்தும் செய்பவர்கள். அவர்களின் கருத்தை நீங்கள் ஏன் ஒதுக்கவேண்டும் அவர்கள் எவ்வாறு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தங்களின் மிகக் கேவலமான கருத்தை உள்நுளைப்பார்கள் என்றே நான் இந்த பதிவை இடுகிறேன்.

இந்திய இராணும் இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளுக்கும் மற்றும் பல போராட்டக் குழுக்களுக்கும் இந்தியாவின் பல இடங்களிலும் ஏன் ஆயுத பயிற்சி அளித்து? அப்போது எங்கே போனது இலங்கைத்திருநாட்டின் இறையான்மை? எப்படி அமரிக்கா காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சியம் ஆதரவும் அளித்ததோ அதே போல் தான் இங்கும் இந்தியா பிரிவினையை ஆதரித்தது.இப்போது எங்கிருந்து வந்தது சிறிலங்கா பாசிச நாட்டின் இறையாண்மை. தமிழக மக்களே, கொள்கைகள் ஆளும் வர்க்கங்களின் விருப்பத்திற்கே வகுக்கப்படுகின்றன.

ஈழத்தமிழர்களை விடுங்கள். அரபிக்கடலில் இந்திய மாலுமிகளுக்கு ஆபத்து. உடனே இந்திய போர்க் கப்பல்கள் போய் கடற்கொள்ளையர்களை வேட்டையாடிவிட்டு வருகின்றன. தமிழக கடலில், இந்திய பெருங்கடலில்ல, தமிழக கடலுக்குள்ளே பல வருடங்களாக தமிழ் மீனவர்கள் வேட்டையாடடப்படுகின்றனரே நடுவன் அரசு என்ன புடுங்கிறது. காங்கிரஸ்காரர்களே சொல்லுங்கள்?

கருணாநிதி தன் பரிவாரங்களுடன் டெல்லிக்கு காவடி எடுத்தபின் 35நாட்களுக்குப் பிறகு மன்மோகன் கடவுள் சென்னை வந்து சொன்னாராம் பிரனாப் விரைவில் சிறிலங்கா செல்வார் என்று. இதையே மன்மோகன் சிங் வெளிநாட்டு இந்தியர் சந்திப்பில் வேண்டாம் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் சொன்னாலே அவர்களின் அக்கறை பற்றி விளங்கியிருக்கும். அரசியல்ல இதல்லர்ம சகஜமப்பா என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியே உங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள். ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் அவர்கள் ஈழத்தமிழர்களை மதிக்காவிட்டால் உங்களையும் மதிக்க வில்லை என்று.

நீங்கள் இந்தியர்களாக இருங்கள். ஆனால் தமிழனாக இருங்கள். கார்கிலில் போர் என்றால் நிதி. பிகாரில் வெள்ளம் என்றால் நிதி. தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தது ஆனால் எங்கிருந்தும் நிதி வரவில்லை. அவர்கள் வறுகும் மட்டும் வறுகுவார்கள். நீங்களும் வாரி வழங்கிங்கொண்டிருங்கள்.

லசந்த கொலைக்கும் கருணாவிற்கும் முடிச்சுப்போடும் செய்தி

கருணா தன் காதலியுடன் இருப்பதை அண்மையில் கொலைசெய்யப்பட்ட லசந்த கடந்த 31ஆம்திகதி ஒரு நட்சத்திர விடுதியில் பார்த்ததாக செய்தி ஒன்றை இலங்கையின் இனவாத பத்திரிகையின் உச்சமான ஜலன்ட் பத்திரிகை வெளியிட்டிருந்தது. என்னடா சாத்தான் வேதம் ஓதுகிறது என்று பார்த்தேன்.

இதைப்பற்றி பேசுவதற்கு முன் தமிழர் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஒரு ஊடகவியலாளரும் பந்தி எழுத்தளருமாகிய தாரகி என அறியப்பட் சிவராமை பற்றி ஒரு சிறு அறிமுகம். பேராதனைப்பல்கலைக்கழத்தில் ஆங்கில இலக்கியம் படித்தவர். ஈழப்போராட்டத்தில் ஆரம்பகாலம் தொட்டே ஈடுபாட்டுடன் இயங்கிவந்தவர். புலிக்கு எதிரான இயக்கத்தில் இருந்தாலும் பி்ன் புலிகளின் விடுதலை தொடர்பான தெளிவில் புலிகாளால் உள்வாங்கப்பட்டவர். இங்கு முக்கயமாக கவனிக்கப்படவேண்டியது புலிகளை எடுத்தற்கெல்லாம் குற்றஞ்சாட்டும் எவரும் இவரோடு புலிகளின் உறவின் ஆரம்பத்தையும் பின் அதன் ஆழத்தையும் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் தனக்கென ஒரு சிற்பபான பாணியைக் கொண்ட இவர் எப்போதும் மிக எளிமையான வாழ்க்கையை கொண்டிருந்தார். புலிகளின் போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து அவர்களோடு இணைந்து மிகவும் நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கினார். புலிகள் தங்கள் எதிரிகளையெல்லாம் கொல்வார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்ப்பிக்க இவருக்கும் புலிகளுக்கும் இடையே மலர்ந்த இவரது ஆழ்மையான உறவே போதும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த மிகச்சிறந்த பத்தி ஆக்கங்களுக்கு சொந்தக்காரரான இவரின் ஆக்கங்களைப்படித்தே நான் அரசியலில் கற்றுக்குட்டி நிலைக்கு வந்தேன். எதையும் மிக நுட்மான முறையில் ஆய்வு செய்து வெளியிடும் இவரின் ஆக்கங்கள் சிறிலங்கா அரசுக்கு மிகுந்த தலையிடியை கொடுத்தது உண்மை. இவரின் ஆங்கில ஆக்கங்கள் சிங்கள மக்களிடையே தாக்கங்களை ஏற்படுத்தியது. இன்நிலையில் ஒருநாள் இரவு கடத்தப்பட்டு சிறிலங்காவின் உயர் பாதுகாப்புவலயத்தில் பாராளுமன்றதிற்கு அருகில் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். அதற்கு காரணம் இன்னோரு அடிவருடி இயக்கமான டெலோவைச் சேர்ந்த சித்தார்த்தன் என கதைகள் வந்தன.

சரி விடயத்திற்கு வருபோம். இந்த லசந்தவிற்கு எதிராக அரச தரப்பில் இருந்து கொலைமிரட்டல்கள், தாக்குதல்கள் என பலதை சந்தித்தவர்। எனினும் எவ்வித பயமுமின்றி எதிர்கொண்டவர்। கோதபாய இவருக்கு எதிராக பல வழக்குகளையும் போட்டுள்ளார்। இப்படி உலகமே அரசாங்கத்தை சந்தேகப்படும் போது என்னடா இது கருணாவை இழுக்கிறார்களே। அதுவும் புலனாய்வு ஊடகவியல் (Investigating journalism) என்ற விடயமே இல்லாத ஜலட் பத்திரிகையிருந்து என்று பார்த்தால் எனக்கு நான் மேலே சொன்ன விடயம் ஞாபகத்திற்கு வந்தது. இரு கொலைகளுக்கும் அரசாங்கம் முக்கிய காரணமாக இருந்து கொண்டு வேறுஒருவர் மீது பழிபோடுவது போல ஒரு சந்தேகம்.

1. கருணாவை லசந்த சந்தித்திருந்தால் ஏன் அவர் அதற்கு பின் (டிசம்பர் 31) தமது எந்த பத்திரிகையிலும் அதைப்பற்றி எழுதவில்லை.

2. கருணா காதலியுடன் பெந்தோட்டையில் அவ்வளவு இலகுவாக பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வரமாட்டார். வந்திருந்தாலும் லசந்தவோ வேறு பத்திரிகையாளர்களோ அவர்ருக்கு அருகில் விட்டிருக்கமாட்டார்கள் சிறிலங்காவின் சிறப்பு மெப்பாதுகாப்காளர்கள். (அப்படி லசந்தவினால் கருணாவை இலகுவாக பார்க்கமுடியுமானால் கரும்புலிகள் அவருக்கு முதல் கருணாவை சந்திதிருப்பார்கள்.)

3. இனவாத ஊதுகுழலான ஜலட் பத்திரிகைக்கு எப்படித்தெரிந்தது இந்த கதை.

இப்படிப் பல சந்தேகங்கள். உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா? மிகப்புத்திசாலியான எதிரி. ஆனால் குள்ளநரித்தனத்தில் மட்டும். பொறுத்திருந்து பார்ப்போம் வீரத்தில் யார் என்று.
தமிழக உறவுகளுக்கு,
ஈழத்திலிருந்து.
நன்றி: இணையத்தளம்

மற்றும் படி என்ன சொல்வது. சிலர் உணர்ச்சிவசப்படாமல் பின்னுட்டமிடுபவர்கள் எப்படி இடுவர்ர்கள் என நினைத்தேன்

சிறுமி என்று ஒத்துக்கொள்பவர்கள்: புலிகளின் சிறுவயது போராளி
பெண் என்று ஒத்துக்கொள்பவர்கள்: பெண் புலி உறுப்பினர்
தமிழர் என்பவர்: புலி தான் கொன்றது

மற்றும் படி உணர்ச்சிவசப்படுபவர்கள் எல்லாரும் தமிழர்கள் அல்லது மனிதர்கள்.
இதையல்லாம் காங்கிரஸ் பார்க்க வேண்டும் என நான் கேட்டமாட்டேன். ஏதோ இதைப்பார்த்துதான் அவர்களுக்கு அங்கு நடக்கும் அநியாயம் தெரியவேண்டியதில்லை. அவர்கள் கொடுத்த பணத்தில் தான் அவர்கள் அறியத்தான் இது நடக்கிறது. ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஏன் என்று புரியவி்ல்லை. மனித சங்கிலி நடத்தினால் தான் மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் ஈழத்தமிழர் அவலம் தெரியுமா? அப்படியானால் இந்திய அரசாங்கத்திற்கு இதல்லாம் தெரியாமல் தான் இருக்கிறதா? ம்ம். சிலவேளை மன்மோகன் குடுத்த 2000கோடியும் இவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஏன் பாரதிரரஜா, சீமான் அமீர் வைகோ இவர்கள் எல்லாம் புலிகளிடம் பணம் வாங்குவது என்று காங்கிரஸ்சரி பிராமண பத்திரிகைகள் இவற்றுடன் சிறிலங்கா அரசாங்கம் கூட சொல்கிறது. இது கூட இந்திய உளவுத்துறைக்கு தெரியாமல் தான் நடக்கிறது போல. காரணம் அப்படி வாங்கியிருந்தால் இவர்களையெல்லாம் ஒரு வாங்கு வாங்கியிருக்கலாம் தானே. மத்திய அரசாங்கம் என்னதான் செய்கிறதோ தெரியவில்லை.