Wednesday, December 16, 2009

ஒரு பக்கத்தி்ல் ஒரு பாரதம் - அண்மையில் இரசித்த ஆசிரியப்பத்தி

ஒருவார காலதாமதத்தில் இருக்கிறமை அச்சிட வேண்டிய தேவை இப்போது இல்லை. அத்தகைய தேவைகள் கடந்த காலங்களில் இருந்தன. இப்போது அது இல்லையென்றே தெரிகிறது. நவம்பர் மாதக் கடைசி வாரத்தில் மீண்டும் ஒரு தலையங்கம் எழுதப்படுகிறது. இது எழுதப்படுகிறபோது 27ம் திகதி முடியவில்லை. உங்கள் கைகளில் 'இருக்கிறம்' அச்சாகி வருகிறபோது டிசம்பர் தொடங்கிவிடும். கடலலை போல எதையும் பொருட்படுத்தாது காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில முடிவுகள் அல்லது தொடக்கங்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில்கூட நடந்து விடுகிறது. என்னதான் சொன்னாலும் நவம்பரின் இறுதி வாரத்தில் எதையேனும் செய்துவிடும் போக்கு எல்லோரிடமும் தெரிவதை உள்ளூர உணர முடிகிறது.

எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்.

எங்கட பக்கத்தில் இப்ப எல்லோரும் பசியோட இருக்கிறம். யார் குத்தினாலும் அவசரமா எங்களுக்கு அரிசி வேணும். உரல் கொண்டந்தவன் யார்? உலக்கை கொடுத்தவன் யார்? எவன் வீட்டில் நெல்லுக் குத்தப்படுகுது, என்பதான விசயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. காது, கண்ணெல்லாம் பஞ்சாகி அரிசிக்காக நாங்கள் கைகள் நீட்டுகிற காலத்தில இதையெல்லாம் யோசிக்க முடியாது. யாரும் வடை தந்தா சாப்பிட நாங்கள் தயார். உழுந்தாட்டினவன் யார்? ஓட்டை போட்டவன் யார்? எண்டெல்லாம் இனி யோசிக்க முடியாது.

எழுத்தோட எழுத்தா நவம்பர் கடைசியில இன்னொன்றையும் சொல்ல வேணும்.
கோவணத்தையாவது காப்பாத்த நாங்கள் நினைக்கிறபோது, அயல் வீட்டில பட்டு வேட்டி கட்டிக்கொண்டு சால்வை சாத்த வரச்சொல்லி ஒரு மூத்தவா கூப்பிடுகிறார். அவர் கட்டி இருக்கிறது பட்டு வேட்டி இல்லை என்று தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவருக்கு சால்வை போர்த்த தயாராகிறவர்கள் பற்றி மனவேதனை இருக்கிறது.

செம்மொழி மாநாடு என்ன பாரதப் போரின் பத்தாம் நாளா?

1 comment:

  1. சில வேறுபாடுகள் இருந்தாலும் தயானந்தா அவரின் மதிப்பிற்குரிய பீஷ்மருக்கு மரியாதையுடன் நெத்தியடி..

    ReplyDelete